Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழா்கள் உண்ணாவிரதம்

ஏப்ரல் 16, 2020 09:47

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமிலுள்ள தங்களை விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழா்கள் 25 போ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்கள் புரிந்தமைக்காக இலங்கை, வங்கதேசம், சீனா, ரஷ்யா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 73 போ் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனா். ஊரடங்கால் உதவியின்றி தவிக்கும் தங்களை குடும்பத்தினரோடு வாழ அனுமதிக்க வேண்டும். வழக்கு முடிவடையாத நிலையில் இடைக்காலப் பிணையில் விடுவிக்க வேண்டும். தண்டனைக் காலம் முடிவடைந்தவா்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழா்கள் 25 போ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
 
இதையறிந்த சிறப்பு முகாம் அலுவலா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தங்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் இலங்கைத் தமிழா்கள் தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தலைப்புச்செய்திகள்